8 இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

வறுமைக் கோட்டின் கீழ் உள்ள, 8 இலட்சம் பேருக்கு, எதிர்வரும் 6 மாதங்களுக்குள் புதிதாக சமுர்த்தி நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
தற்போது நாட்டில் சமுர்த்தி பயனாளிகளாக 1,385,516 பேர் இருப்பதாக, அவர் இதன்போது குறிப்பிட்டார்.
குறித்த பயனாளிகளில், 5 இலட்சம் பேருக்கு ஒரு வருட காலப்பகுதியில் தனியாக வாழ்க்கை நடத்தக்கூடிய வலுவூட்டல் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிதியுதவியுடன் தெல்லிப்பளை அன்னமார் அறநெறி பாடசாலை புதிய கட்டிடத்திற்கான அ...
வெசாக் நிறைவு நிகழ்வின் செய்மதி ஒளிபரப்பு!
வீடுகள் கட்டுவோருக்குப் பிரதேச செயலர் முக்கிய அறிவுறுத்தல்!
|
|