15 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை – தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தமித்த விக்ரமசிங்க தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/01/download-5-2.jpg)
நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட சகல இளைஞர், யுவதிகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிளொக் செயின் எனப்படும் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தமித்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது இளைஞர்களின் கல்வி, தொழில்சார் தகுதிகள் மற்றும் ஏனைய தகுதிகளுக்கான தரவுத்தளமாக இயங்கும் சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இலத்திரனியல் அடையாள அட்டைகளைத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தமித்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கூகுள் வரைப்படத்தில் இலங்கையின் (Google Maps) வீதிகள் (Street view)
வியாழனன்று இலங்கைக்கு வருகிறது 5 இலட்சம் இந்திய கொவிட்-19 தடுப்பூசிகள்!
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு - அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் ப...
|
|