வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படும் – இராணுவ தளபதி நம்பிக்கை!

Saturday, March 13th, 2021

வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 7 ஆக குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்தோடு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

அந்தவகையில் குறித்த இரண்டு கோரிக்கைகளும் எதிர்வரும் நாட்களில் அங்கீகரிக்கப்படும் என தான் நம்புவதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் போது வெளிநாட்டில் இருந்துவரும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது எமக்கு பூரண நம்பிக்கை - கூட்டமைப்பு எம்.பி சித்தார்த்தன் கருத்து!
27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில், பஸ்கள் சேவையில் ஈடுபடமாட்டாது – துறைசார் திணைக்களங்கள் அறிவிப்பு!
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – நிதி அமை...