விரைவில் மாகாண சபை தேர்தல் – மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவிப்பு!

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண ஆளுநர் காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,
மாகாண சபை தேர்தலை புதிய முறைமையிலா அல்லது பழைய முறைமையிலா நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும்.
அந்த தீர்மானத்திற்கு ஆளுநர் என்ற வகையில் தம்மால் இயன்ற ஆதரவை வழங்கவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பாடசாலை நேரத்தின் போது மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்த தடை!
ஜனாதிபதியின் உத்தரவுவை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் ஏற்பாடு - இலங்கை போக்குவ...
விவசாயிகள் நெல்லை சந்தைக்கு வழங்காமையே அரிசி இறக்குமதிக்கு காரணம் - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளு...
|
|