வித்தியா கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் 11ஆம் 12 ஆம் இலக்க சந்தேகநபர்களின் விளக்கமறியலும் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்கள் நேற்று(11) ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
எஞ்சிய இரண்டு சந்தேகநபர்களும் இன்று(12) ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர்.சபேஷன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் இந்த கொலை சம்பவம் தொடர்பில் 13 ஆவது சந்தேகநபரும் கைது செய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் கூட்டு வன்புணர்வுக்குட்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மரமுந்திரிகை செய்கையை ஊக்குவிக்க முயற்சி!
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவே பயணக் கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டது – ஒருவர் மாத்திரமே வெளிய...
கருவாடு உற்பத்தியாளர்களுக்கும் நட்டஈடு - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!
|
|
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு - இரு குழுக்களைத் தவிர மற்றய அனைத்தினதும் செயற்பாடுகளும் இரத்து - நாடாளுமன்...
தகவல்களை வழங்காத அரச நிறுவனங்கள் குறித்து விசாரணை - தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு அறிவிப்பு...
இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை -அமைச்சர் பிரசன்ன ...