வரலாற்றில் ஏற்படாத நிலை தற்போது இலங்கையில்!

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நீர் மின் உற்பத்தி 11 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அதுல வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின், மின்சார உற்பத்தி வரலாற்றில் இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிலவும் வறட்சியான காலநிலையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், வறட்சியான காலநிலையால் ஏற்படும் தாக்கத்தால் மின்சாரத் தடை ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இவ்வருடத்தின் இதுவரையான நாட்களில் டெங்குநோயின் தாக்கத்திற்கு இலக்காகி 200 பேர் உயிரிழந்துள்ளனர். 69 ...
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கொரோனா: மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டனர்!
அபாய மட்டத்தை எட்டியது இரணைமடு குளம் - அனைத்து வான் கதவுகளும் திறக்கப்படுள்ளதாக தாழ்நில பகுதி மக்களி...
|
|