வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 303 இலங்கையர்கள் இன்ற அதிகாலை நாடு திரும்பினர்!

Monday, November 23rd, 2020

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 303 இலங்கையர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி குவைத்திலிருந்து 283 இலங்கையர்கள் இன்று அதிகாலை 2.00 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் கட்டார், தோஹாவிலிருந்து 18 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர். அத்துடன், ஜப்பான் நரிட்டோவிலிருந்து இருவர் அதிகாலை 4.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: