வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/10/vikatan_2020-06_bca0fac8-0031-4a32-b3bb-89235e5a6149_vikatan_2019_08_98e96d0b_5042_4f3a_b203_c46a62109a02_Arrest.jpg)
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை வீதியூடாக வாகனத்தில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் மாதகல் பகுதியையும் மற்றையவர் யாழ்ப்பாண பகுதியையும் சேர்ந்தவர்கள் என அறியமுடிகிறது.
சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
000
Related posts:
நாட்டின் புதிய அரசியலமைப்பை தீர்மானிப்பது முதலமைச்சரல்ல: பிரதமர் !
குடாநாட்டில் பால்வெண்டிச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!
கடந்த பத்து ஆண்டுகளில் டெங்கு நோயின் தாக்கம் மிக குறைவான ஆண்டாக 2020 ஆம் ஆண்டு பதிவானது!
|
|