வடக்கு, கிழக்கில் வன்முறைகளுக்கு எதிராக சுற்றிவளைப்புகள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/05/download-1-16.jpg)
வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகரகுறிப்பிட்டார்.
ஆவா குழுவினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பில், அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு,பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவர்கள் அனைவரும் விசேட சுற்றிவளைப்பின் மூலம் கைது செய்யப்பட்டவர்கள் எனவும், தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விசேட சுற்றிவளைப்புகள்மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
Related posts:
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஐ.எஸ் அமைப்பு தொடர்பில் 13 தகவல் எனக்கு வழங்கப்பட்டுள்ளது!
உள்ளூராட்சித் தேர்தல் 2023 -இவ்வாரம் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி முன்னெடுக்கப்படும் என எதிர்பார...
உயர்தரப் பரீட்சைக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
|
|