ரஷ்ய படையினரின் தாக்குதலால் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் சேதம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/03/merlin_66730600-720x375-1.jpg)
உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையமான ஜபோரிஜியா தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளியாகின்றன.
அணுமின்நிலைய கட்டிடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் எறிகணை தாக்குதல் காரணமாக அணுமின்நிலையம் தீப்பிடித்துள்ளது என எனர்ஹொடரின் மேயர் டிமிட்ரோவ் ஓர்லோவ் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பகுதியில் உள்ள நகரத்திற்கு வெளியே கடுமையான மோதல்கள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
ரஷ்ய படையினர் டாங்கிகளின் உதவியுடன் நகரத்திற்குள் நுழைவதற்கும் அணுமின் நிலையத்தை கைப்பற்றுவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் பொதுமக்கள் அணுமின்நிலையத்திற்கு அருகிலும் நகரத்தின் பல பகுதிகளிலும் கொங்கிறீட் தடுப்புகளை அமைத்து போரிட்டு வருகின்றனர். இதனிடையே உக்ரைனில் நான்கு அணுமின்நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலஞ்ச, ஊழல் விசாரணைப் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை!
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள செய்தி!
12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் கவனம் - இராஜாங்க அமைச்...
|
|