யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபப் பலி – அதிர்ச்சிக் காரணம் வெளியானது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/05/download-2-6.jpg)
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ். இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி பயிலும் சுதுமலை வடக்கு – மானிப்பாயைச் சேர்ந்த 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த மாணவன் தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு அங்கிருந்து மதியவேளை, உறவினர்களைப் பார்ப்பதற்காக சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் உள்ள காங்கேசன்துறைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.
கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிகவும் சோர்வடைந்திருந்த அவர் தண்ணீர் குடித்துள்ளார். பின்னர் மென்பானமும் அருந்தியுள்ளார். இதன்பின் தலைசுற்றுவதாகக் கூறி வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அவரை உறவினர்கள் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ந்தனர். எனினும் சிசிக்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.
Related posts:
|
|