யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரழப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/05/corona-death-toll-sri-lanka-700x375-1.jpg)
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மீசாலையைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார்.
பளை பிரதே செயலகத்தில் அரச உத்தியோகத்தராகப் பணியாற்றும் அவரது மகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
இந்நிலையில், அவரது தந்தை உயிரிழந்த நிலையில், சடலத்தில் மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று முதல் வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்பட்ட 362 பிரேரணைகள் அமுலாகின்றது!
பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்!
தொடரும் சீரற்ற காலநிலை - அனர்த்தங்களில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு!
|
|