முன்னோக்கிப் போகும் வரலாற்றில் தடம் பதிப்பதற்கு ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா வழியில் அணி திரளுங்கள் – கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் அழைப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/06/5.jpg)
அழிந்துபோன எமது தேசத்தினை பாதுகாத்து கட்டியெழுப்புவதற்கும், முன்னோக்கிப் போகின்ற வரலாற்றில் இடம் பிடித்து தடம் பதிப்பதற்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வழியில் அணி திரளுங்கள் என கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் அழைப்பு விடுத்துள்ளார்’.
கிளிநொச்சி பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களுக்குமான சந்திப்பு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வீணைச் சின்னத்தில் இலக்கம் 5 போட்டியிடுபவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்
எமது கட்சியிடம் சிறந்த தலைமைத்துவமும் ஆற்றலுள்ள தொண்டர்களும் இருப்பது மட்டுமல்லாது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறையும் உண்டு. இந்த பொறிமுறையை நாம் நடைமுறைப்படுத்துவதற்கு எம்மிடம் அரசியல் பலம் இதுவரை போதுமானதாக இல்லாதுள்ளது.
அந்தவகையில் அழிந்துபோன எமது தேசத்தினை பாதுகாத்து கட்டியெழுப்புவதற்கும், முன்னோக்கிப் போகின்ற வரலாற்றில் இடம் பிடித்து தடம் பதிப்பதற்கும் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா வழியில் அணி திரளுங்கள் உங்கள் எதிர்பார்ப்பகளும் அபிலாஷைகளும் வென்றெடுக்கப்படும் என்றார்.
Related posts:
|
|