மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை!

Wednesday, March 13th, 2019

மின்சார விநியோகத்தை தொடர்ந்தும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரவி கருநாணாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

இந்தநிலையில், அனல்மின்நிலையங்களை பயன்படுத்தி மின்சார விநியோகத்தை வழங்கவுள்ளதாக ரவி கருநாணாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts: