மாணவர்கள் தொடர்பில், பெற்றோருக்கும் முக்கிய பொறுப்பு உண்டு – ஒழுக்கம் குறித்து அதிபர்களுடன் கலந்துரையாடுகின்றது கல்வியமைச்சு !
Thursday, June 15th, 2023பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அதிபர்களுடன் கலந்துரையாடி வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்றுள்ள பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த கலந்துரையாடல் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மாகாண அதிகாரிகளுடன் வாரத்திற்கு ஒருமுறை தொலைக்காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக பல தெளிவூட்டல்களை வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் எதிர்காலம் தொடர்பில், பெற்றோருக்கும் முக்கிய பொறுப்பு உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
பேருந்து கட்டணம் 6 வீதத்தால் உயர்வு!
யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் ஜப்பான் பயணமானார்!
ஒக்ஸ்போர்ட் அகராதியில் "அப்பா"வுக்கு அங்கீகாரம்!
|
|