மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் உதவிப்பொருட்கள் வழங்கிவைப்பு!

தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக பாதிக்கப்பட்ட கோப்பாய் அம்மன் கோவிலடியை சேர்ந்த 17 குடும்பங்களிற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (21) குறித்த பகுதியில் வெள்ளத்தினால் பாதிப்படைந்த மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் இராமநாதன் ஐங்கரன் பாதிக்கப்பட்ட மக்களது நிலமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டதுடன், அவர்களுக்கு உடடினத் தேவையான உலர் உணவுப் பொருட்களையம் வழங்கி வைதுள்ளார்.
இதன்போது கட்சியின் கோப்பாய் மத்தி வட்டார உபசெயலாளா் கந்தசாமி சிவயோகன் கட்சியின் புத்தூர் மேற்கு வட்டார செயலாளா் ஆறுமுகசிவம் அரவிந்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் ஆரம்பம்!
நல்லூர் திருவிழா வியாபாரத்துக்கு இம்முறை கடுமையான கட்டுப்பாடு!
ஹிஷாலினியின் சரீரம் இரண்டாவது பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது!
|
|
முன்பள்ளிச் சிறார்களின் கல்வித் தரத்தை மீண்டும் உயர்வடையச் செய்வோம் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரக...
இலங்கையர்களின் குரல்களாகவே நாங்கள் இருக்கின்றோம் - சர்வதேச நாடாளுமன்ற தின செய்தியில் சபாநாயகர் மஹிந்...
உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் மீண்டும் திரிபோஷா உற்பத்தி - சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரக...