மதுரை – பலாலி இடையிலான மற்றொரு விமான சேவையும் விரைவில் – இந்திய தனியார் விமான நிறுவனங்களுடன் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை என தகவல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/07/Flight-488073-750x375-1.jpg)
மதுரை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது மதுரையிலிருந்து நாளாந்தம் கொழும்பிற்கான நேரடி விமான சேவையை ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் நினைவுப்பேருரைநிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுசிறப்பிப்ப...
புதிய தேர்தல் முறைமை குறித்து எமக்கு அறிவிக்கவில்லை - இலங்கை ஐக்கிய கிராமசேவகர்கள்!
வேலையற்ற பட்டதாரிகள் கவனத்திற்கு!
|
|