மண்டைத்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/04/téléchargement-8.jpg)
மண்டைத்தீவு கடலிற்கு மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு நேற்று (10) பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். முல்லைத்தீவில் இருந்து நேற்று முன்தினம்(08) யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் மீன்பிடிக்க வந்துள்ளனர்.
படகில் மீன்பிடிக்கச் சென்ற வேளையில் படகு பழுதமைந்த நிலையில் நடு;க்கடலில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலறிந்து கடலடிக்கு மீனவர்கள் சென்ற வேளையில் அங்கு மீனவர்களை காணவில்லை என்றும் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மீன்பிடிக்கச் சென்ற உறவினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (10) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
Related posts:
2016ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இருவாரத்தில் வெளிவரும்!
பாரதப் பிரதமரின் வருகை இலங்கை தொடர்பில் உலகுக்கு பல செய்திகளை சொல்லும்- இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ...
மஹிந்த முன்னரே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் - தாக்குதல்களின் பின்னணியில் ஜே.வி.பி மற...
|
|