மகேந்திரன் இன்டர்போல் உதவியுடன் கைதாவார் –அமைச்சர் மஹிந்த அமரவீர!

Monday, October 31st, 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துச் செல்ல, ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, தற்போது வெளிநாடு சென்றுள்ள அர்ஜுன மகேந்திரன், இலங்கைக்குத் திரும்பாவிட்டால் அவரை சர்வதேச பொலிஸாரினூடாகக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார்.

வலஸ்முல்ல பிரதேசத்தில், நேற்று(30) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

arjuna-1

Related posts: