பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு – பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/02/Forces.jpg)
சமுகமளிக்காத முப்படையினரை சட்ட ரீதியாக விலக்குவதற்காக அல்லது சேவையில் மீண்டும் இணைவதற்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் இன்றுடன்(12) நிறைவடைகின்றது.
72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கான அதிகாரங்களுக்கு அமைய, கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதி பொதுமன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய, பொது மன்னிப்பு காலப்பகுதியில் முப்படையை சேர்ந்த 6259 பேரும் உயர் அதிகாரிகள் 13 பேரும் சேவைக்கு சமூகமளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
கைப்பணி கலைஞர்களுக்கு காப்புறுதி - ஜனாதிபதி!
கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதற்கான அடிப்படை தேவைகளை பெற்றுத்தாருங்கள் - யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மா...
சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுங்கள் - பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சரவை இணைப்ப...
|
|