பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் 10 வீதத்தால் குறைக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/07/download-1-26.jpg)
பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அந்தப்பொருட்களின் விலைகளை 10% குறைக்க உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாடசாலை பாதணிகள் மற்றும் பைகள் உற்பத்தியாளர்களுடன் இன்று நிதியமைச்சில் நடத்திய நீண்ட கலந்துரையாடலின் பின்னரே உற்பத்தியாளர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கருத்து தெரிவித்த உற்பத்தியாளர்கள், தற்போது சந்தையில் உள்ள தொகையும் புதிய விலை திருத்தத்தின் கீழ் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அந்த நன்மையை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய உற்பத்தியாளர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
முகநூல் காதல்: நகைகளை இழந்த யுவதி!
எதிர்வரும் வாரத்திற்குள் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி!
ஸ்வீடன் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்!
|
|