பழி­வாங்கல் தொடர்ந்தால் கடு­மை­யான தொழிற்­சங்க நட­வ­டிக்கை : மின்சார சபை !

Wednesday, April 12th, 2017

ஒரு நாள் அடை­யாள வேலை நிறுத்­தத்தை மேற்­கொண்ட மின்­சார சபை ஊழி­யர்கள் பழிவாங்கப்படு­கின்­றனர் எனத் தெரி­வித்த மின்­சார சபை இணைந்த தொழிற்­சங்­கத்தின் பொதுச் செய­லாளர் ரஞ்சன் ஜயலால் பழி­வாங்­கல்கள் தொடர்ந்தால் கடு­மை­யான தொழிற்­சங்க போராட்டம் வெடிக்கும் என்றும் தெரி­வித்துள்ளார்.

மின்­சார சபை ஊழி­யர்­களின் சம்­பள முரண்­பா­டுகள் நீக்­கப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்தி அண்மையில் மின்­சார சபை ஊழி­யர்கள் ஒரு நாள் அடை­யாள வேலை­நி­றுத்­தத்தில் ஈடுபட்டனர். இவ்­வாறு தொழிற்­சங்கப் போராட்­டத்தில் ஈடு­பட்ட ஊழி­யர்­க­ளுக்கு எதி­ராக நிர்­வாகம் தற்­போது பழி­வாங்கல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றது.

மின்­சார சபை குடி­யி­ருப்­புக்­களில் உள்ள ஊழி­யர்கள் வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றனர். தன்­னிச்­சை­யான முறையில் இட­மாற்­றங்கள் செய்­யப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு பல்­வேறு விதங்­களில் பழி­வாங்­கல்கள் நடை­பெ­று­கின்­றன. இதற்கு எதி­ராக நட­வ­டிக்­கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்­பெ­று­கின்­றன.  இந்நிலை தொடருமானால் கடுமையான தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

Related posts: