பரீட்சையின் போது மேலும் 10 நிமிடங்கள் வழங்க நடவடிக்கை!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை என்பவற்றுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் விடை எழுத வழங்கப்படும் நேரத்தினை 10 நிமிடங்களால்அதிகரிக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 03 மணித்தியாலங்களைக் கொண்ட வினாப் பத்திரத்துக்கு 10 நிமிட நேரம் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீர்மானம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்தே எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க பொறிமுறை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்
மீண்டும் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!
யாழ்.மாவட்ட வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
|
|