பயணத் தடையால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அறிவிப்பு!

பயணத் தடைகளால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மேலும் தெரிவிக்கையில்-
“பயணக் கட்டுப்பாடு காரணமாக வருவாயை இழந்த அனைவருக்கும் அரசு உதவி கிடைக்கும். அத்துடன் யாரும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட மாட்டார்கள். குறித்த செயற்றிட்டத்தில் 28 மில்லியன் குடும்பங்கள், சலுகைகளைப் பெறுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய உர பிரச்சினைக்கு தீர்வாக, கரிம உரங்கள் எதிர்காலத்தில் இறக்குமதி செய்வது தொடர்பிலும் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|