பதிவு செய்யப்படாத இணையத்தளங்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை!

சகல இணையத்தளங்களையும் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கையொன்றை அமுல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது செயற்பட்டு வரும் இணையத்தளங்களை கணக்கிட முடியாதுள்ளது. அரச நிறுவனங்கள், அமைச்சு, தனியார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு மட்டத்திலும் ஆயிரக் கணக்கில் இணையத்தளங்கள் செயற்பட்டு வருகின்றன.
சில இணையத்தளங்கள் ஊடக சுதந்திரம், ஊடக ஒழுங்கு என்பவற்றை மீறிச் செயற்படுவதாக அரச தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது போன்ற நடவடிக்கைகளைக் மட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தொலைத் தொடர் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத இணையத்ளங்களை முடக்கி விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
Related posts:
|
|