நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா இல்லை – யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/04/download-4-8.jpg)
யாழ்ப்பாணத்தில் நேற்று பரிசோதிக்கப்பட்ட 15 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் 8 பேருக்கும் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கும் நேற்றுப் பகல் ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவர்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, யாழ்ப்பாணத்தில் இதுவரை 7 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் வைத்தியர் சத்தியமூர்த்தி மேலும் கூறினார்.
Related posts:
ஓடும் பேருந்தில் தீ விபத்து – இரத்தினபுரியில் அனர்த்தம்!
முன்னைய அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் உதவியது – அமைச்சர் ஜ...
எரிபொருள் விலை உயர்வு - புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு –புகையிரத பெட்டிகளை அதிகரிக...
|
|