நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் – மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை!

Friday, July 15th, 2022

நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

அத்தியாவசிய பெட்ரோலியத்திற்கு செலுத்த போதுமான அந்நிய செலாவணி கிடைக்குமா என்பதில் “நிச்சயமற்ற நிலை” உள்ளது என்று கூறினார்.

சர்வதேச பிணை எடுப்புப் பொதியைப் பெறுவதற்கான முன்னேற்றம் நிலையான நிர்வாகத்தைக் கொண்டிருப்பதில் தங்கியுள்ளது என்றார். பொருளாதார நெருக்கடியால் நாடு வெகுஜன அமைதியின்மையின் பிடியில் உள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதையடுத்து, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது நாளாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதையும், உணவு, எரிபொருள் மற்றும் ஏனைய அடிப்படைப் பொருட்களின் விலை சாதாரண மக்களுக்கான விலை உயர்வையும் கண்டுள்ளது’ என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு பின்நிற்கப் போவதில்லை - அரச வங்கிகளுக்கு ஜனாதிபதி கோட...
யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளர் தவறான வழிநடத்தல் - பறிபோகிறது மருத்துவபீடத்தின் வரப்பிரசாதம் – நடவட...
எம்.எஸ்.சீ மெசினா கப்பல் இலங்கையின் கடல் எல்லையில் இருந்து வெளியேறியது – கடற்படை அறிவிப்பு!

மீள் குடியேற்றாவிடின் அத்துமீறி நுழைந்து மீள்குடியேறுவோம் - வலி வடக்கு மக்கள் அரசுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் அச்சம் தரும் வேகத்தில் கொரோனா வைரஸ் தொற்று - அரச மருத்துவ சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை!
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்றுமுதல் ஆரம்பம் - பரீட்சைகள் தி...