நாளாந்தம் 25 சிறுவர்கள் துஷ்பிரயோகம் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தகவல்!

Monday, October 18th, 2021

நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அவர்களுள் 21 சதவீதமானவர்கள் 5 வயதிற்கு குறைந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, நாளாந்தம் 6 பேர் போதைப்பொருளுக்கு அடிமையாவதாகவும் சுடட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: