நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9000 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/09/download-2-4.jpg)
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் 12 மாவட்டங்களில், இரண்டாயிரத்து 428 குடும்பங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் ஆயிரத்து 671 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அனர்த்தங்களினால் 33 வீடுகள் முழுமையாகவும், 555 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் 2 இடர்தங்கல் முகாம்களில், 99 குடும்பங்களை சேர்ந்த 325 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
கடும் வறட்சி: 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் குடிநீர் இல்லாமல் சிரமம்!
நிமோனியா நோய் தொடர்பில் ஆரம்பத்தில் இனங்கண்டால் குணப்படுத்த முடியும் - அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன...
நாடு முழுவதும் வேகமாக பரவும் இன்புளுவன்சா காய்ச்சல் - இதுவரை 15 பேர் மரணம் - சுகாதாரப் பிரிவு எச்சரி...
|
|