நாட்டில் இதுவரை 2 இலட்சத்து 35 ஆயிரத்து 413 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

Saturday, June 19th, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  2 ஆயிரத்து 349 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 35 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் திவுலுபிட்டிய, பெலியகொட, சிறைச்சாலை மற்றும் புத்தாண்டு கொவிட் கொத்தணிகள் ஊடாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 28 ஆயிரத்து 401ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: