நாட்டின் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளன – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/09/download-2-25.jpg)
நாட்டில் நேற்றுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இதுவரை 89 இலட்சத்து 73 ஆயிரத்து 670 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியும், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி 9 இலட்சத்து 49 ஆயிரத்து 105 பேருக்கும், மொடர்னா தடுப்பூசி 7 இலட்சத்து 58 ஆயிரத்து 282 பேருக்கும், பைஸர் தடுப்பூசி 2 இலட்சத்து 4 ஆயிரத்து ,685 பேருக்கும், ஸ்புட்னிக் வி 43 ஆிரத்து 453 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை நாட்டில் 109 இலட்சத்து 68 ஆயிரத்து 195 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கேந்திர மையமாக மாற்றப்படவுள்ள இலங்கை !
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை 08ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்...
இலங்கையிலும் 188 அதிகரித்தது கொரோனா நோயாளர் எண்ணிக்கை - மன்னாரில் முடக்கப்பட்டது தாராபுரம் கிராமம்!
|
|