நாடளாவிய ரீதியில் மின் விநியோகத்திற்கு இடையூறு!

மின்உற்பத்தி நிலையங்களில் முன்னெடுக்கப்படும் நிர்மாணப்பணிகளின் தாமதத்தால் மின் விநியோகத்திற்கு இடையூறு ஏற்படும் என மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீண்டகால மின் உற்பத்திக்காக திட்டமிடப்பட்டுள்ள மின் நிலையங்களின் நிர்மாணப்பணிகள் தாமதமடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஜமுனா சமரசிங்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது,நிர்மாணப் பணிகளின் தாமதம் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு தேவையான அறிக்கைகள் தயார் செய்யப்படுவதாகவும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஜமுனா சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
மின்வலு எரிசக்தி கண்காட்சி ஆரம்பம்!
சட்டத்தில் இடமில்லை : ஆகவே ஆதரவளிக்க முடியாதுள்ளது - முதல்வருக்கான இல்லம் தொடர்பில் றெமீடியஸ்!
உரிமைகளை நிலைநாட்ட முயலும்போது ஏனையவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுமானால் அதை ஏற்க முடியாது –...
|
|