நடுவர் சபை உறுப்பினர்களில் கணிசமானோர் தேர்தலில் களம் குதிப்பு !

Friday, December 29th, 2017

நடுவர் சபைகளில் உறுப்பினர்களில் கணிசமான  எண்ணிக்கையினர் உள்ளுராட்சித் தோர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

உள்ளுராட்சித் தோர்தலில் வேட்பாளராகி தேர்தலில் போட்டியிடும் நடுவர் சபை உறுப்பினர்கள் தாம் உள்ளுராட்சித் தேர்தலில்  போட்டியிடுவது தொடர்பாக தவிசாளருக்கு எழுத்து ழூலம் அறிவிப்பதோடு சிலர்  குறித்த காரணம் தொடர்பாக லீவு வழங்குமாறு கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நடுவர் சபை உறுப்பினர்கள் அரசயல் கட்சி சார்பு மற்றும் தொடர்புகள் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் பதவி நிலைக்கு கண்டிப்பான நிபந்தனையாக இருப்பதால் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் நடுவர்சபை உறுப்பினர் பதவி இழந்தவர்களாகக் கருதப்படுவார்கள் எனக் கூறப்படுகின்றது.

Related posts:


பேருந்தில் பயணித்தவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளுங்கள் - வடமராட்சி மக்களுக்கு சுகாதாரப் பிரிவினரின் அ...
வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளை கோருகிறது யாழ் மாவ...
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்பட வில்லை – கல்வி அமைச...