தொழிலாளர் செயலகத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு தொழில் ஆணையாளர் நாயகம் பிரபா சந்திரகீர்த்தி பொதுமக்களிடம் கோரிக்கை !

கொழும்பு நாரஹென்பிட்டி தொழிலாளர் செயலகத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபா சந்திரகீர்த்தி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும், அதற்கான விண்ணப் பப்படிவங்களை ஒப்படைப்பதற்காகவும் கொழும்பு நாரஹென்பிட்டி தொழிலாளர் செயலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் தொழில் ஆணையாளர் நாயகம் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக் காரணமாகக் கூடுதலான மக்கள் பிரதான அலுவலகத்திற்கு வருவதைத் தடுக்கும் நோக்கமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் கொடுப்பனவுகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நாடு பூராகவும் உள்ள மாவட்ட மற்றும் வலய அலுவலகங்களில் மேற்கொள்ள ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமற்போன மீனவர் நேற்றுக் கரை திரும்பினர்!
பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு!
அனைத்து துறைகளிலும் புத்திஜீவிகள் உருவாகவது அவசியம் – ஜனாதிபதி!
|
|