தெற்காசியாவின் அறிவுப் பொக்கிஷம் எரிந்து இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/06/101833794_yaaaaha.jpg)
தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆண்டுகள் பல கடந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம்வரை மாறாது உள்ளது.
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இச் சம்பவமானது தமிழ் மக்களின் அடையாம், அறிவு மற்றும் பண்பாடு போன்றவற்றை இல்லாதொழிக்கும் தமிழ் இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே தமிழ் மக்கள் இன்றும் பார்க்கின்றார்கள
இந்நூலக அழிப்பின் போது பல நூற்றாண்டு பழமைவாய்ந்த தமிழ், ஆங்கில நூல்களும் மற்றும் ஓலைச்சுவடிகளும் அழிந்து போன துயர நாளை இன்று தமிழ் மக்கள் நினைவு கூர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடையாளப் பணிப்புறக்கணிப்பிற்கு ஆசிரியர்கள் தயார் - இலங்கை ஆசிரியர் சங்கம்!
வேலைத்தளத்தில் இடம்பெறும் வன்முறை, துன்புறுத்தல்களை குறைப்பதற்காக இலங்கை சட்ட அமைப்பிற்கு மற்றுமொரு ...
உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்டங்களை மாற்றாது – ரஷ்ய அதிபர் புடின் தெரிவிப்பு!
|
|