துருக்கி ஜனாதிபதி எர்டோகனை சந்தித்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன !

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தையிப் எர்டோகனின் உத்தியோகபூர்வ அரச வைபவத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கலந்துகொண்டார்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பல வருட கால இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சபாநாயகர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில் உலகையே உலுக்கிய துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முன் வந்த இலங்கைக்கு ஜனாதிபதி எர்டோகன் நன்றியும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
எச்சரிக்கை! யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரவேண்டாம்!!
ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு துபாய் நிறுவனம் இணக்கம்!
இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி "இக்பால்" துப்பாக...
|
|