தமிழரசுக் கட்சி அலுவலகம் முற்றுகை!

Tuesday, October 3rd, 2017

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலமையை கவனத்தில் எடுக்க அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினரை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சி அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது

ஆரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்றது

வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுவரும் தமது வழக்குகளை வேறு பிரதேசத்திற்கு மாற்றுவதை கண்டித்தும் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுடன் தம்மை தடுத்துவைப்பதை எதிர்த்தும் தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஒன்பது நாட்களாக சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரகின்றனர்

இந்நிலையில் அவர்களது உறவினர்கள் மற்றம் பொது அமைப்பினர் இணைந்து இன்று இந்த கவனயீர்ப்பை மேற்கொண்டனர். கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துவரும் நிலையில் எதிர்வரும் ஏழாம் திகதிக்கு முன்னர் உரியவர்கள் இவ்விடயத்தில் தலையிட்டு அவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முடிவிற்கு கொண்டுவருமாறு அவர்கள் கோரிக்கை விட்டுள்ளதுடன் தவறும் பட்சத்தில் தொடர்போராட்டங்களை தாம் முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காக காலாகாலமாக தமிழ் மக்களை  ஏமாற்றிவரும் தமிழரசுக் கட்சியும் அதன் பங்காளிகளும் கைதிகள் விடயத்திலும் பல கால அவகாசங்களை வழங்கி மக்களை ஏமாற்றிவருகின்றனர். இந்நிலையிலேயே கைதிகளின் உறவுகள் தமிழ் தேசியக் கூட்டமைபினரிடம் வரம் ஏழாம் திகதிவரை கால அவகாசம் கொடுத்த எச்சரித்தள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: