தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 665 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்!

நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தக் காலப்பகுதியில், 69 வாகனங்களும் பொலிசாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாடு முழுவதும் ஊடரங்கு : 16 ஆயிரத்து 124 பேர் கைது - பொலிஸ் ஊடக பிரிவு!
உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படமாட்டாது - கல்வி அமைச்சு தகவல்!
இவ்வருடம் ஏற்பட்ட விபத்துக்களால் கிளிநொச்சியில் 42 பேர் பலி - வீதி நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்க...
|
|