ஜூலை மாதம் நெடுந்தாரகைப் படகு சேவையில் – வீதி அபிவிருத்தி அதிகாரசபை தகவல்!

Tuesday, June 11th, 2024

ஜூலை மாதம் நெடுந்தாரகைப் படகு சேவையில் – வீதி அபிவிருத்தி அதிகாரசபை தகவல்!

அடுத்த மாதம்முதல் நெடுந்தாரகை படகு சேவைக்கு திரும்பவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையை  மற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

நெடுந்தீவுக்கான படகுப் போக்குவரத்து மார்க்கங்களில் பிரதானமாக நெடுந்தாரகையும் ஒன்றாகக் காணப்படுகிறது.

இந்த நிலையில் நெடுந்தாரகை திருத்தப்பணிகளுக்காக திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு திருத்தப் பணிகளும் ஆரம்பமாகி இருந்தன. இவை முடிவுற்று அடுத்த மாதம் படகு பணிக்குத் திரும்பும் எனவும்  எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை – நெடுந்தீவுக்கான போக்குவரத்துச் சேவையை குமுதினி மற்றும் வடதாரகை என்பன வழங்கி வருகின்றன. மேலும் நெடுந்தாரகைப் படகு சேவைக்குத் திரும்பும் பொழுது வடதாரகை சோதனை நடவடிக்கைக்காக கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: