ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு மேலும் அதிகரிக்கும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்!

Monday, October 21st, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த செலவினம், சுமார் 4 தொடக்கம் 4.5 பில்லியன் ரூபா வரை இருக்கும் என்று ஆணைக்குழு ஆரம்ப மதிப்பீடுகளை செய்திருந்தது.

எனினும் தற்போது தேர்தல் ஆணைக்குழு 7 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு திறைசேரியிடம் கோரியுள்ளது. 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தேர்தலுக்கான செலவு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

பிளாஸ்ரிக் வாக்குப்பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு ஆராய்ந்து வருவதால், ஜனாதிபதி தேர்தலுக்கான செலவினம் மேலும் அதிகரிக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த செலவினங்களை தேர்தல் ஆணைக்குழு இன்னும் இறுதி செய்யவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

Related posts:


புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம் - தீர்வைக் காண்பதற்காக மூவரடங்கிய குழுவை நியமித்தார்...
புதிய மத்திய வங்கிச் சட்டம் - நாட்டின் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்திய விடயத்திற்கு முற்றுப்புள்ளி வை...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து சட்டமா அதிபரை சந்தித்தார் - இரண்டு வெளிநாட்டு இராஜதந்திர...