ஜனநாயக போராளிகள் அமைப்பின் உறுப்பினர் இனியவனின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/01/unnamed-1-1.jpg)
ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் உறுப்பினரான இனியவன் என்றழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனது இறுதி இஞ்சலியை செலுத்தியுள்ளது.
இன்றையதினம் சாவகச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், மற்றும் கட்சியின் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளர் நடுநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கம் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டனர்.
Related posts:
EPF கையாளப்பட்ட விதம் தொடர்பில் உள்ளக விசாரணை - மத்திய வங்கி!
பல கோடி கோழிகள் வருடாந்தம் இறைச்சிக்காகக் கொலை!
2027 ஆம் ஆண்டுமுதல் வற் வரி விகிதத்தை 12 வீதமாகக் குறைக்க திட்டம் - அமைச்சர் பந்துல குணவர்தன தெரி...
|
|