சூரிய கிரகணத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய மரணம்! ஜோதிடர் பாலாஜி ஹாசனின் கணிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/06/625.500.560.350.160.300.053.800.900.160.90-2.jpg)
நாளை நிகழவுள்ள சூரிய கிரகணத்தில் மிகப்பெரிய அழிவு ஒன்றை உலகம் சந்திக்கும் என தமிழகத்தின் பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலுள்ள மிகப்பெரிய ஜோதிடர்களில் ஒருவர் பாலாஜி ஹாசன். இவர் தன்னுடைய கணிப்புகளை எந்தவித தயக்கமும் இன்றி தன்னுடைய கணிப்புகளை வெளிப்படையாக பேசும் ஆற்றல் கொண்டவர்.இதனால் இளம் வயதிலேயே இவர் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். சென்ற ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை முடிவுகளும் இவர் கூறியவாறே அமைந்திருந்தன.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள சூரிய கிரகணத்தின் போது மிகப்பெரிய அழிவை உலகம் சந்திக்கும் என்று இவர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது “ஜோதிடத்தின்படி சூரியனை குறிக்கும் கிரகமானது அரசன், அரசியல்வாதி, உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், கலைத்துறையில் பிரபலமானோர் ஆகியோருக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.
ராகு விபத்து காரகன் மற்றும் மரண காரகன் வருகிற 4 நாட்களில் நேர்கோட்டில் இணைந்து வருவதால் புகழ்பெற்றவர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இன்னும் 5 நாட்களுக்குள் உலகம் மிகப்பெரிய மரணம் ஒன்றை சந்திக்க நேரிடும். அந்த மரணம் நிகழ்ந்த பிறகு அதுகுறித்து உலகம் முழுவதும் பேசப்படும்” என ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|