சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகர்களுக்கான வருடாந்த இடமாற்றம் இரத்து – கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
2021ஆம் ஆண்டில் வருடாந்த இடமாற்ற சபையின் முடிவுகள் கிழக்கு மாகாண இணையத்தளமான EP.gov.lk எனும் மாகாண சுகாதார சேவைகள் வலைப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மேன்முறையீட்டிற்கான விண்ணப்ப படிவமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோவிட் – 19 சூழ்நிலை காரணமாக 2020 எட்டாம் மாதம் 29 ஆம் திகதி வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த முடியாது போயிருந்தது.
இந்நிலையில் இம்முறை 2021 ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்ற சபையின் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்காலிகமாக இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|