சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கி வந்த விடுதியின் உரிமையாளருக்கு தண்டம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/11/download-30.jpg)
யாழ்ப்பாண மாநகரப் பகுதியில் சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில் இயங்கி வந்த விடுதியின் உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
யாழ்ப்பாண நகரிலுள்ள பிரபல்யமான விடுதியொன்றைச் சோதனைக்கு உட்படுத்திய யாழ்ப்பாண மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்சீவன், அங்கு காலாவதியான பொருள்கள், பழுதடைந்த பழங்கள், சுட்டுத்துண்டில்லாத பொருள்கள் ஆகியன இருந்தமையை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து விடுதியின் உரிமையாளருக்கு எதிராக சுகாதாரப் பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விடுதியின் உரிமையாளர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து அவருக்கு 15 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
Related posts:
இன்னும் ஒருமாதத்திற்குள் அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்படும் - மாகாண சபைகள் அமைச்சு!
வடபகுதிக்கு தென்னிலங்கையர்கள் நியமனம் – சீற்றத்தில் வடக்கின் இளைஞர்கள்!
யாழ். மாநகரின் அக்கறையின்மையால் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது – யாழ்ப்பாண பழ வியாபாரிகள் குற்றச்சா...
|
|