சிறு பேருந்து – வேன் மோதி கோர விபத்து.- யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/06/1687657970-ru-2.jpg)
யாழ்ப்பாணம் – கொடிகாமம் ஏ9 வீதியில் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனமும் மோதியே குறித்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
9 பேர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.-000
Related posts:
உரிய பயிற்சியின்றி வெளிநாட்டுக்கு தொழில் செய்ய செல்ல முடியாது – அமைச்சர் தலதா திட்டவட்டம்!
வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான கடுமையான சட்டத்தை மாற்ற கத்தார் அரசு முடிவு!
தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 33 பேர் களம் இறங்கியுள்ளனர் - தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|