சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/10/download-1-34.jpg)
நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா தொற்று தொடர்பாக உரிய அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் குறித்த வைரஸ் அபாயத்தில் உள்ள மாவட்டங்கள் குறித்து அதிகாரிகள் இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு அதிகாரிகள் எடுக்கும் சில முடிவுகள் மக்களுக்கு தவறான சமிக்ஞைகளை காட்டுவதாகவும் தெரிவித்’துள்ள அவர் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள பேருவாலை மற்றும் களுத்துறை பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் நடவடிக்கை குறித்தும் வைத்தியர் ஹரித அளுத்கே அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எல்லைதாடும் மீனவர் சர்ச்சை: அமைச்சர்களான மங்கள சமரவீர, மஹிந்த அமரவீர இந்தியா விஜயம்!
கோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் - அத்துரலிய ரத்ன தேரர்!
தொழில் அலுவலகங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கும் வரையறை!
|
|