கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1620 ஆக அதிகரிப்பு!
Sunday, May 31st, 2020
இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1620 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த 7 பேரும் கட்டாரில் இருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 829 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
யாழில் முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
இன்று முதல் பேருந்து கட்டணம் குறைப்பு!
பிஸ்கட் வகைகளுக்கும் நிறக்குறியீடு!
|
|
|


