குடாநாட்டில் பொலிஸாரின் ரோந்து அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து செல்லும் கொலைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மானிப்பாய் பகுதியில் பொலிஸார் தொடர்ந்தும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை தமிழ் பேசும் பொலிஸார் அதிகமாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.வாள்வெட்டுத் தாக்குதல்கள், கொலை, திருட்டு மற்றும் போதைபொருள் விநியோகம் என்பன யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ளமையை அடுத்து விசேட பொலிஸ் பாதிகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மோசடி நிறைந்த நிறுவனங்களை சீர் செய்வது அவசியமாகும் - ஜனாதிபதி
வவுனியாவில் கோர விபத்து : இருவர் கவலைக்கிடம்!
அலுவலக கணக்கு அறிக்கைகளில் தவறுகள் நடந்தால் சட்டம் பாயும் ;கணக்காளர் நாயகம் எச்சரிக்கை!
|
|