கிரிக்கெட் சபையிடமிருந்த ஆவணங்கள் கையேற்பு – சிறப்பு பொலிஸ்!

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெற் தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்டத்தை ‘ இலங்கை விற்றுவிட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்ததானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்ட கருத்தை மையப்படுத்தி விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த உலக கிண்ண போட்டித் தொடர் தொடர்பிலான அனைத்து ஆவணங்களையும் விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விசேட விசாரணைப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
விளையாட்டு விவகார குற்றங்கள் குறித்த விசேட விசாரணை பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகாவின் ஆலோசனைக்கு அமைய கிரிக்கெட்சபையின் தலைமையகத்துக்கு சென்ற சிறப்புக் குழு இந்த ஆவணங்களைப் பொறுப்பேற்றுள்ளது
Related posts:
சின்னையாவை சந்தித்த சரத் பொன்சேகா!
மக்கள் அதிகமாக நீரை பயன்படுத்துகின்றனர் - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!
கடும் வறட்சியினால் வட,க்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 583 பேர் பாதிப்பு - அனர்த்த மு...
|
|