இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திகளை மீள ஆரம்பிப்பேன் – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ!

Friday, October 18th, 2019


மீண்டும் ஆட்சி அமைத்து நாட்டின் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்திகளை மீள ஆரம்பித்து நிறைவு செய்யக்கூடிய பலமான அணியுடனேயே இந்த முறை களமிறங்கியுள்ளோம்.

நாட்டின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான இயலுமை இந்த அரசாங்கத்திடம் இல்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய வீழச்சியை சந்தித்துள்ளது. இதனால் அந்த துறையை நம்பி இருக்கின்றவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வரலாறு காணாத அபிவிருத்திகள் தமது அரசாங்கத்தினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த அரசாங்கம் அவற்றை இடைநிறுத்தியது.

இந்த அரசாங்கத்துக்கு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்கக்கூடிய இயலுமை இல்லாததன் காரணமாக, பல துறைகளும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன என்று கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Related posts: